Saturday, August 13, 2011

`முன்னூட்டம்`

அடடே!... நானும் BLOG-எழுத ஆரம்பித்து,அதற்க்கு `தலைப்பும்` வைத்து விட்டேனே!.இது அய்யனார்ஸ் ..`கலைடாஸ்கோப்`!. நான் பார்த்த,என்னை பாதித்த மனிதர்களையும்,சம்பவங்களையும்,நான்பார்த்தவாறே உங்களுக்கும் காட்ட நினைக்கும் ஒரு விபரீத முயற்சியும் கூட! இதில்,இதைப் படிக்கும் நீங்கள் கூட இருக்கலாம்!.இனி நீங்களும் ரசிக்க,என் கலைடாஸ்கோப்பை,உங்கள் கண்களுக்குத் தருகிறேன். சமயத்தில் ...நான் காணாத காட்சிகள் கூட, உங்கள் கண்களுக்கும்,கருத்துக்கும் தெரியலாம்!.காட்சிகளை மாற்றி,மாற்றிப் பார்த்து ரசியுங்கள்.எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பாருங்கள்...ஆனால் தயவு செய்து,..இவ்வளவு அழகான பிம்பங்களைத் தருகிறதே!..உள்ளே என்னதான் வைத்திருப்பான் இவன்? ...என ஆராயும் நோக்கில்,இதை உடைத்துப் பார்த்து விடாதீர்கள்..காரணம் உள்ளே இருப்பது கூட ஏற்கனவே `உடைந்த விஷயங்கள்தான்!`......(காட்சிகள் தொடரும்!....)